Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் புதுப்பாளையம் சாலை இந்திரா காலனி பகுதியில் அமைந்துள்ள சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்டோர் அங்குள்ள சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலுக்கு 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள், மற்றும் சிவப்பு நிற ஆடைகள் அணிந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பால் அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரணை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது கோயில் நிர்வாகத்தினர் தலைவர் எம்.பாலச்சந்தர், பொருளாளர் ஆர்.ஏ.பரமேஸ்வரன், துணைப் பொருளாளர் பா. அருள் குமார், மற்றும் பக்தர்கள், மற்றும் பொதுமக்கள், திருப்பணி குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.